தேவசகாயம் பிள்ளை முக்தி – புதிரா புனிதமா
பிள்ளைவாள் ஒருவர் நாயர் குடும்பத்தில் நீலகண்டன் என்று பிறந்து, வளர்ந்த பின் கிறிஸ்தவம் தழுவி தேவசகாயம் பிள்ளை என்றாகி, சாதிகளை மறுத்ததால் உயர்சாதிச் சதிகாரகளின் ஆலோசனையின் பேரில் மன்னர் ஆணையால் கொல்லப்பட்டு அவ்வுயிர்த் தியாகத்தால் 250 ஆண்டுகள் கழித்து இப்போது முக்தி பெறுகிறார் என்று சொல்லப்படுகிறது
பட்ட மளித்து விடல்
உண்மையில் சொல்லப்போனால் ஏசு என்று ஒருவர் இருந்ததற்கே இவர்களிடம் ஆதாரம்
கிடையாது. அதனால் தான் தற்போதய போப் திரு பெனெடிக்ட், “ஏசுநாதர், நாம்
நினைத்ததை விட சுமார் 200 முதல் 500 ஆண்டுகளுக்கு முன் பிறந்திருக்கலாம்”
என்கிறார். அப்படியென்றால், ஏசு பிறப்பை சுமார் 2050 ஆண்டு என்ற
அடிப்படையில் சர்ச்சால் நிரூபிக்கப்பட்ட சாகசங்கள் புளுகுமூட்டைகள்! ஆக,
இவர்களுடைய மொத்த சரித்திரமே புனைவுதான்.
அதே போல் புனிதர், தூதர் போன்ற விஷயங்கள் பாரம்பரிய இறைவழிபாட்டின் முக்கிய நாட்களை ஒட்டியே வருமாறு அமைக்கப்படும் என்பதும் வரலாறு. All saints Day என்று கொண்டாடப்படும் விழா பாகன் கலாச்சாரத்தில் வந்த ஒரு பித்ருக்கள் நினைவு தினம் போன்றது. மாயன் கலாச்சாரம் இருந்த இடம் தெரிகிறது. அதன் தடம் குறித்த வரலாற்று ஆய்வாளார்கள் ஆராய்கிறார்களாம்.
இவர்களுக்குச் சாதகமாயிருப்போரும் பாரம்பரியத்தை ஏதேனும் ஒரு காரணம் சொல்லிப் பகடி செய்வதிலேயே குறியாக இருப்பார்கள். ஒரு உதாரணம் கருணாநிதியின் தைப் புத்தாண்டுப் பொய். இது வரலாற்றைத் திரிக்கும் வேலை என்று பலர் சான்று பகன்ற போதும் பலமுறை சொல்லப்படும் பொய் உண்மையாகும் என்ற கோயபல்ஸ் கோட்பாட்டில் மாறாப்பற்றுக் கொண்ட பகுத்தறிவுச் செம்மல் தம் ஜாதகத்தை நொந்தபடியே தான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்.
வலைப்பதிவர்கள் சிலரும் இது போன்ற பொய்ப் பிரச்சாரங்களுக்குத் துணைபோகின்றனர். தங்கள் பதிவுகளில் பதிந்த செய்திகளுக்கு ஆதாரம் கேட்டால் தங்கள் வலைத்தளத்திலேயே சில நாட்களுக்கு முன் பதிந்த பதிவைத் தருகின்றனர், முந்தைய பதிவு வேண்டாம் ஆதாரம் வேண்டும் என்றால் வாழ்வாதாரமே பறிபோனது போல் கூக்குரலிட்டுத் தம் எழுத்தார்வத்துக்கு முட்டுக்கட்டை போடுவதாக அரற்றுவர்.
அது இருக்கட்டும் ஒரு பக்கம். உண்மையைத் திரித்தால் அது பொய். தேவனின் பெயரால் நடக்கும் விஷயத்தில் பொய் கலப்பது குற்றம். ஆனால் தேவனின் பெயரால் தேவாலயங்கள் ஏன் இப்படித் திரிபை நம்பிச் செயலில் இறங்குகிறார்கள்? பகவத் கீதையில் இருந்து ஆங்காங்கே பத்திகளைச் சுட்டு ஒரு பாதிரியார் பைபிளுக்கு உரை போல எழுதி “இந்திய பைபிள்” என்று பெயர் சூட்டினார். ஏன் திருடுகிறீர்கள் என்று கேட்டால் பதில் வருவதில்லை. பிற்காலத்தில் பைபிளின் கருத்தே கீதையில் உள்ளது என்று புளுகுவதற்கு இன்றே அஸ்திவாரம் போடப்படுகிறது.
தன்னுடையது மட்டுமே நாகரிகம். தன்னைப்போல் நடை உடை பாவனை கொள்ளாதவர்கள் காட்டுமிராண்டிகள் என்ற மேட்டிமைத்தனம் இது. என்ன செய்தேனும் பிற கலாச்சாரங்களை அப்புறப்படுத்தி தம் கலாசாரத்தை (?!) நிலைநாட்டும் விஷ(ம) நரித்தனம் இது. அதுவே வரலாற்றைத் திரிக்கவும் பிறர் சரித்திரப் பதிவுகளை எரிக்கவும் தூண்டுகிறது. அன்பை போதிக்க இதுவா வழி என்று கேட்பவன் தீவிரவாதி என்கிறார்கள்.
600 ஆண்டுகளாய் முயன்று முழுதும் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற முடியாது தோற்றும், விடாது கருப்பெனத் தொடரும் இந்த நடவடிக்கைகளை விழிப்புடனிருந்து வேரறுக்க வேண்டும். வெளிப்பார்வைக்கும் மெய் போலவும், சற்றே உற்றுப் பார்த்தால் புதிராகவும் இருக்கும் இப்புனிதங்கள் ஆராய்ந்து பார்த்தால் அணுவைச் சத கூறிட்ட கோணளவும் உண்மையற்ற அரற்றல்கள் என்பது புரியும்.
இன்றைய அவசர உலகில் பலருக்கு ஆராய நேரமிருப்பதில்லை. சற்றே நேரம் ஒதுக்குவோம். பாரம்பரியம் காப்போம். பண்பாடு போற்றுவோம். தேசமுத்துமாரியின் தாள் பணிந்து தழைப்போம். வந்தே மாதரம். வந்தே மாதரம்.