நமச்சிவாய வாழ்க
உலகெலாம் உணர்ந்தவன்
பக்தர்களைக் காப்பவன்
நன்மைபல செய்பவன்
நல்லோர்க்குத் துணையவன்
ஈசன்தாள் பணிவோம்
வாழ்விலே உய்வோம்.
(இஃதென் முதல் கவிதை. நான் ஏழாம் வகுப்புப் படிக்கையிலே சேக்கிழார் பற்றியும், இறையனார் அடியெடுத்துக் கொடுத்து அவர் எழுதிய பெரியபுராணம் பற்றியும் என் தந்தையார் விளக்கிய போது “இப்படிக் கஷ்டமா இருந்தா யாருக்கும் புரியாதுப்பா. நான் எழுதறேன் ஈஸியா” என்று உலகெலாம் என்ற சொல் முதலாகக் கொண்டு எழுதிய கவிதை.)